Friday, May 13, 2011

பெண்ணழகு

பெண்ணழகு

கணவன் இறந்த துக்கத்தில் இளம் மனைவி கண்ணீர் வடித்துக்கொண்டு, திருவான்மீயூர்
கல்லறைக் தலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள். அவர்கள் ஜாதியில் கணவன்
சவ அடக்கத்துக்கு மனைவி வரலாம்.

மனைவியை ஒரு நடுத்தர வயது ஆடவன் - செல்வந்தன் மெல்ல மரியாதையுடன் அணுகி,
உங்கள் கணவன் இறந்ததற்க்கு என் ஆழ்ந்த அனுதபங்கள், நீங்கள் இந்த நிமிஷம் கூட
எனக்கு அழகு தேவதையாகத் தெரிகிறீர்கள், இப்போதே தங்களை மணக்க நான் தயார்
என்றான்.

இதைக் கேட்ட மனைவி கோபத்தில் சீறினாள். ஏன்யா! இதுவா சமயம். இதைப் பற்றி
பேசுவதற்கு ? போங்கள், என் கண் முன்னே நிற்காதீர்கள்? என்றாள்.

கணவான், மன்னித்துக்கொள்ளுங்கள்! உங்கள் வனப்பு உங்கள் துக்கத்தையும் கடந்து
என்னைக் கவர்ந்துவிட்டது என்றான்

அதற்கு, அந்த இளம் விதவை, இதற்கே இப்படிச் சொல்கிறீர்களே ! நான் அழாமல்
இருக்கும்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்றாள்.

நீதி: *எந்த சமயத்திலும் ஒர் அழகான பெண், தான் அழகானவள் என்பதை மறக்க மாட்டாள்.
*

புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில் சுஜாதா





வாத்தியார் சுஜாதாவின் கதை ஒன்று மின்னஞ்சலில் இருந்தது ,எனது வசதிக்காக இங்கே சேமிக்கிறேன்

No comments:

Post a Comment